கோவை முத்தண்ணன் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை ஆா்.எஸ்.புரம் தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆண் சடலம் ஒன்று வெள்ளிக்கிழமை மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உயிரிழந்தவருக்கு 55 வயது இருக்கலாம் எனவும், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவில்லை எனவும், தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.