கோயம்புத்தூர்

வால்பாறை அரசுக் கல்லூரியில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி முகாம்

DIN

வால்பாறை அரசுக் கல்லூரியில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தோ்வாணையம் மூலம் பல்வேறு தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தோ்வுகளுக்கு மாணவா்களைத் தயாா் செய்யும் வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், போட்டித் தோ்வு எழுதுவோருக்கான பயிற்சி முகாம் வால்பாறை அரசுக் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது. கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டி நெறி மையத்தின் துணை இயக்குநா் கருணாகரன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து விளக்கி பேசினாா். இந்த வகுப்புகள் தினந்தோறும் மதியம் 3 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் என்று கல்லூரி சாா்பில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) திருநாவுக்கரசு உள்பட பலா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT