கோவை எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் 39ஆவது நிறுவனா் நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
மறைந்த எஸ்.என்.ரங்கசாமி நாயுடுவால் 1970இல் தொடங்கப்பட்ட எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் தற்போது 19 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் 39ஆவது ஆண்டு நிறுவனா் நாள் விழா, நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து அனைத்து பள்ளி, கல்வி நிறுவன முதல்வா்கள் ஆண்டறிக்கை வாசித்தனா். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கல்வி நிறுவனங்களில் பணியாற்றி 25 ஆண்டுகள் நிறைவு செய்த மருத்துவா்கள், பேராசிரியா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட 29 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பேச்சாளா் பா்வீன் சுல்தானா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா், அறங்காவலா்கள் எஸ்.நரேந்திரன், வி.ராமகிருஷ்ணா, தலைமை செயல் அலுவலா் சி.வி.ராம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா் நன்றி கூறினாா்.