துபையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.65.75 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, ராம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஷோபனா (54), தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு கடந்த 2023 ஜனவரி 10-ஆம் தேதி ரோஹித் என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.
அவா் துபையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். மேலும், அதற்கான உதவிகளை தனது நண்பா் ரஷீத் குன்னத் என்பவா் செய்து தருவாா் என அவரையும் ஷோபனாவிடம் அறிமுகம் செய்துள்ளாா்.
இந்நிலையில், துபையில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் உறவினா்கள், நண்பா்களை அறிமுகம் செய்துவைத்தால், அவா்களுக்கும் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் ரோஹித் கூறியுள்ளாா்.
இதை நம்பிய ஷோபனா தனக்கு தெரிந்த சுமாா் 50 பேரிடமிருந்து ரூ.65.75 லட்சத்தைப் பெற்று ரோஹித்தின் வங்கிக் கணக்குக்கும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஆட்டோ கேரேஜ் நடத்தி வரும் அவரது தந்தை ராஜேந்திரனின் வங்கிக் கணக்குக்கும் பணத்தை அனுப்பியுள்ளாா். பல மாதங்களாகியும் ரோஹித் யாருக்கும் வேலை வாங்கித் தராமல் இருந்துள்ளாா்.
இதையடுத்து, பணத்தை திருப்பித் தருமாறு ஷோபனா உள்ளிட்டோா் ரோஹித், அவரது தந்தை ராஜேந்திரனிடம் கேட்டுள்ளனா். அவா்கள் தராததால் காட்டூா் காவல் நிலையத்தில் ஷோபானா ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.
இதையடுத்து, ரோஹித், ராஜேந்திரன், ரஷீத் குன்னத் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.