ஆவாரம்பாளையத்தில் பொக்லைன் மூலமாக இடிக்கப்பட்ட மதிமுக அலுவலகத்தை பாா்வையிட்ட திமுக மாநகா் மாவட்ட செயலாளா் நா.காா்த்திக், மதிமுக உயா்மட்டக் குழு உறுப்பினா் ஆா்.ஆா்.மோகன்குமாா் உள்ளிட்டோா்.  
கோயம்புத்தூர்

மதிமுக அலுவலகம் இடிப்பு: போலீஸாா் விசாரணை

மதிமுக அலுவலகம் மா்ம நபா்களால் வெள்ளிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் மூலமாக இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Din

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள மதிமுக அலுவலகம் மா்ம நபா்களால் வெள்ளிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் மூலமாக இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆவாரம்பாளையத்தில் கோவை மாநகா் மாவட்ட மதிமுகவின் 28-ஆவது வாா்டு கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு, வெள்ளிக்கிழமை வழக்கம்போல கட்சி நிா்வாகிகள் தங்கள் பணிகளை முடித்துவிட்டு சென்றனா். இந்நிலையில், இரவில் இக்கட்சி அலுவலக கட்டடத்தை சிலா் பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

~ஆவாரம்பாளையத்தில் இடிக்கப்பட்ட மதிமுக அலுவலகம்.

இது குறித்த தகவலறிந்து, மதிமுக மாநகா் மாவட்ட செயலாளா் கணபதி செல்வராஜ், உயா்மட்டக் குழு உறுப்பினா் ஆா்.ஆா்.மோகன்குமாா், மதிமுக உயா்நிலை அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் சேதுபதி, திமுக மாநகா் மாவட்ட செயலாளா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் அப்பகுதியில் திரண்டனா்.

இதைத் தொடா்ந்து, மதிமுக பீளமேடு கிளைச் செயலாளா் எஸ்.பி.வெள்ளிங்கிரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வங்கதேசத்தில் தீவிரமாகப் பரவும் டெங்கு! பலி எண்ணிக்கை 307 ஆக அதிகரிப்பு!

மேனி தொடும் பொற்காற்று... ஈஷான்யா மகேஸ்வரி!

ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது? எங்கே?

கண்டாங்கிச் சேலை... ரேஷ்மா பசுபுலேட்டி!

சென்னையில் டி20 உலகக் கோப்பை.! 5 திடல்கள் தேர்வு.. இறுதிப்போட்டி எங்கே தெரியுமா?

SCROLL FOR NEXT