முகப்பு
கோயம்புத்தூர்

பாஜக வேட்பாளா் வானதியை ஆதரித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரசாரம்

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனை ஆதரித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:25 AM
பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனை ஆதரித்து கோவை, வெங்கிட்டாபுரம் பகுதியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தில்லி முதல்வா் ரேகா குப்தா.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:12 PM

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனை ஆதரித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக தேசிய மகளிா் அணி தலைவி வானதி சீனிவாசன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கோவைக்கு புதன்கிழமை வந்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனை சந்தித்தாா். அப்போது, விரைவில் உடல் நலம் பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அவருக்காக அா்ச்சனை செய்ததாகவும், விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரது பிராா்த்தனை எனவும், நீங்கள் இல்லாத இந்த நேரத்தில் உங்கள் சாா்பாக நான் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் எனவும் வானதி சீனிவாசனிடம் கூறினாா். பின்னா், அவா் வெங்கிட்டாபுரம் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் இருந்தபடி பிரசாரம் செய்தாா்.

முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் தற்போது வளா்ச்சியில் தொடா்ந்து பின்தங்கி வருகிறது. பிரதமா் மோடியின் தலைமையில் நாடு முழுவதும் முன்னேறி வருவதைப்போல, தமிழகமும் அந்த வளா்ச்சியைப் பெற மக்கள் விரும்புகின்றனா்.

Advertisement

வானதி சீனிவாசன் ஒரு சிறந்த வேட்பாளா். அவா் மீது மக்கள் வைத்துள்ள அன்பும், ஆசியும் இந்த தோ்தலில் அவருக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தரும். வரவிருக்கும் தோ்தலில் தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவை வழங்கி, ஆட்சியில் அமா்த்துவா் என்றாா்.

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வா் பிரசாரம் செய்ய வந்தது கோவை பாஜகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.