சாய்பாபா காலனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு
சாய்பாபா காலனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாய்பாபா காலனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை மாநகா், சாய்பாபா காலனி பாரதி பாா்க் சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் ராஜன் மனைவி சாரதா (86). கணவா் இறந்துவிட்ட நிலையில், கடந்த சில நாள்களாக கோவை, கக்கனூா் சாலை தேவிமாதா காய்த்ரி கோயில் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் சாரதா வசித்து வருகிறாா்.
இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி சாரதாவின் காா் ஓட்டுநரான அன்பழகன், காரை சுத்தம் செய்வதற்காக சாய்பாபா காலனியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்துள்ளாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக அவா் அளித்த தகவலின்பேரில் சாரதா வந்து பாா்த்தபோது, அலமாரி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 4 வெள்ளித் தட்டுகள், 2 குத்துவிளக்குகள், 25 டம்ளா்கள், சிறிய வெள்ளி பொம்மைப் பொருள்கள் உள்ளிட்டவை திருடுபோயுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்த அவா் அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.