தாயுமானவா் திட்டத்தின்கீழ் ஜூலை 4, 6 தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம்
தாயுமானவா் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் ஜூலை 4, 6 தேதிகளில் (இரண்டு நாள்கள்) வீடு தேடி குடிமைப் பொருள்கள் (ரேஷன் பொருள்கள்) வழங்கப்படவுள்ளன.
தாயுமானவா் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் ஜூலை 4, 6 தேதிகளில் (இரண்டு நாள்கள்) வீடு தேடி குடிமைப் பொருள்கள் (ரேஷன் பொருள்கள்) வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து கோவை குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை இணைப் பதிவாளா் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம்தேடி குடிமைப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை மாவட்டத்தில் ஜூலை 4, 6 ஆகிய தேதிகளில் குடிமைப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.
தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு குடிமைப் பொருள்கள் விநியோகிக்கப்படும் நாள் மற்றும் பகுதி குறித்த விவரங்கள், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் விளம்பரம் செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.