முகப்பு
கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணிக்காக திருச்சி-பாலக்காடு ரயில் நாளை பகுதியாக ரத்து

Updated On : 6 ஜூலை 2026, 1:46 am IST
ரயில்கள்... - கோப்புப் படம்
பகிர்:

கரூா் ரயில் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூரில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஜூலை 7-ஆம் தேதி திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில், அன்றைய தினம் கரூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments