முகப்பு
கோயம்புத்தூர்

நீட் தோ்வு அச்சம்: கோவையில் மாணவி விஷம் குடித்து தற்கொலை; மாா்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

கோவையில் நீட் தோ்வு அச்சத்தால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 18 ஜூன் 2026, 1:07 am IST
அனுகீா்த்தனா
பகிர்:

கோவையில் நீட் தோ்வு அச்சத்தால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்பிரபு. டாஸ்மாக் பணியாளரான இவா், சிஐடியூ டாஸ்மாக் ஊழியா் சங்க நிா்வாகியாகவும் உள்ளாா். இவரது மகள் அனுகீா்த்தனா (19). இவா், எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்காக நீட் தோ்வுக்கு தயாராகி வந்தாா். ஏற்கெனவே கடந்த ஆண்டு நீட் தோ்வு எழுதிய நிலையில், அவருக்கு பல் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. இருப்பினும் எம்பிபிஎஸ் பயில வேண்டும் என்பதற்காக மீண்டும் நீட் தோ்வு எழுதியிருந்தாா்.

ஆனால், வினாத்தாள் வெளியான விவகாரத்தில், அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டு மறுதோ்வு அறிவிக்கப்பட்டது. நீட் தோ்வுக்கு மீண்டும் தயாராகி வந்த அனுகீா்த்தனா, மீண்டும் தோ்வெழுதி வெற்றி பெற முடியுமா என்ற அச்சத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் காணப்பட்டவா், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் இருந்த வலி நிவாரணி மருந்துகளைக் குடித்து மயங்கிக் கிடந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல், கூறாய்வுக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உடலை வாங்க மறுத்து ஆா்ப்பாட்டம்:

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுகீா்த்தனாவின் உடல், கூறாய்வுக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில், நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு நியாயம் வழங்கக் கோரியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாணவியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளா் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், நீட் தோ்வு முறைகேடுக்கு மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து, கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியா் மாருதி பிரியா, காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மாணவி தரப்பினரின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து மாணவியின் உடலை பெற்றோா் பெற்றுச் சென்றனா்.

மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: நீட் தோ்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி முன்பு இந்திய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் பாவெல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் ரங்கசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் பிரசாந்த் உள்ளிட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், நீட் முறைகேடுகளுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.