ஈரோடு

சாலை விபத்து: தொழிலாளி சாவு

DIN

பெருந்துறை நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி மீது டிப்பர் லாரி மோதியதில் உயிரிழந்தார். 
பெருந்துறை, சென்னிவலசைச் சேர்ந்தவர் கோபால் (54). முடி திருத்தும் தொழிலாளி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறை காவல் நிலையம் எதிரிலுள்ள சாலையில் வியாழக்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மோதியதில் கோபால் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயோ கோபால் உயிரிழந்தார்.  இதுகுறித்து, பெருந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT