அரசு பேருந்து மோதி மூதாட்டி சாவு
பெருந்துறை அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.
பெருந்துறை அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.
பெருந்துறையை அடுத்த சரளை அருகே சாலையில் 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்துச் சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மூதாட்டி மீது மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டி குறித்த விவரங்களை பெருந்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.