ஈரோடு

மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

DIN

அரசூர் பகுதியில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி பொதுமக்கள் பிடித்துக் கொடுத்த 2 லாரி, பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சத்தியமங்கலம் அருகே அரசூர் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் மணல் கடத்தத் தயாராக இருந்த 2 லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்துள்ளதாக வட்டாட்சியர் கார்த்திக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த வட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்கள் சிறைபிடித்து வைத்திருந்த 2 லாரி, பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அத்தாணியைச் சேர்ந்த பிரகாஷ், மணிகண்டன், பிரபு ஆகிய மூவருக்கும் சொந்தமான வாகனம் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வட்டாட்சியர் கார்த்தி கூறுகையில், ஆற்றில் இருந்து மணல் எடுத்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால், அரசூர் பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் கொட்டி வைக்கப்பட்ட
மணலைத்தான் நாங்கள் எடுத்து வந்தோம் என வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பறிமுதல் செய்யும்போது லாரிகள் ஆற்றில் இருந்து மணல் எடுத்து வரவில்லை. எனவே, மேற்கொண்டு உரிய விசாரணை செய்தால்தான் உண்மை தெரியும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT