ஈரோடு

கல்லூரிப் பேருந்து-கார் மோதல்: பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

DIN

மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டை பகுதியில் கல்லூரிப் பேருந்து, கார் மோதியதால் விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான காரில் வந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். விபத்துக்குக் காரணமான பேருந்தை மறித்து மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஈரோட்டிருந்து தனியார்  கல்லூரி பேருந்து,  மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு கஸ்பாபேட்டை அருகே வரும்போது, சென்னிமலை நோக்கிச் சென்ற கார் மீது மோதியது. இதில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. காரில் இருந்த கெளரிசங்கர் என்பவரையும்,  அவரது மனைவியையும் அருகிலிருந்த மக்கள் மீட்டனர். 
இதையடுத்து, கல்லூரி வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள், அதிக வேகத்தில் பேருந்தை இயக்குவதால் தான் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா காவல் துறையினர் கல்லூரிப் பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகளை மாற்று வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் பரபரப்பு நிலவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT