ஈரோடு

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா 

DIN

சித்தோடு அருகே உள்ள எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

இவ்விழாவுக்கு, கல்லூரித் தலைவர் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தார். பொருளாளர் வி.ஆர்.முருகன், இணைச் செயலாளர்கள் ச.வசந்தி சத்யன், ரா.பரிமளாராஜா, முதல்வர் எம்.ராமமூர்த்தி, துணை முதல்வர் இரா.சண்முகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், ஒவ்வொரு துறை சார்ந்தும் மாணவர்களால் தனித்தனியே பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாட்டு வண்டி நடனம், கும்மியாட்டம், சலங்கையாட்டம், உரியடித்தல், கயிறு இழுத்தல், கோலமிடுதல், உணவு உண்ணுதல், மலர் தொடுத்தல் ஆகிய போட்டிகள் மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்டன.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT