ஈரோடு

ஈரோட்டில் மக்கள் குறைதீர் கூட்டம்: 217 மனுக்கள் அளிப்பு

DIN

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 217 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. 
இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமை வகித்தார். இதில், முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக் கடன், தொழில் கடன்,  குடிநீர், சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 217 மனுக்களைப் பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்கள் துறை ரீதியான விசாரணைக்கு அனுப்பி, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பிரபாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ஜெயராமன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT