ஈரோடு

கார் விபத்து: டிஎஸ்பி, மனைவி காயம்

DIN

கோபி அருகே கார் விபத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர், அவரது மனைவி காயமடைந்தனர். 
கோபி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணசாமி (56). இவர் தனது மனைவி மல்லிகாவுடன் (50), காரில் கோபிக்கு வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தார். குன்னத்தூர் - கோபி சாலையில் வந்தபோது பூச்சநாயக்கன்பாளையம் பகுதியில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.
இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT