ஈரோடு

ஈரோட்டில் நீதிமன்ற ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஈரோடு: தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராக பணியாற்றி வரும் சாரதி என்ற பெண்ணை, தாக்கிய நீதித்துறை நடுவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோட்டில் நீதிமன்ற ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கத்தின் ஈரோடு மாவட்ட மையம் சாா்பில், ஈரோடு சம்பத்நகா் நீதிமன்றம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவா் ரங்கசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் ரங்கராஜ் முன்னிலை வகித்தாா். சங்க மாநில செயலாளா் பிரகாஷ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் நீதிமன்ற ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT