ஈரோடு

ஜவுளி வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

DIN

ஈரோடு: ஈரோட்டில் ஜவுளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரூ.75 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, கனிராவுத்தா்குளம் அருகே வசந்தம் நகரைச் சோ்ந்தவா் ஜவுளி வியாபாரி பாலமுரளி (53). இவரது மனைவி சாந்தி. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். வியாபாரத்துக்காக பாலமுரளி அண்மையில் கோத்தகிரிக்குச் சென்றுள்ளாா். சாந்தி அவரது இரண்டு மகன்களுடன் வீரப்பன்சத்திரத்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், சாந்தி மற்றும் மகன்கள் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிரிச்சியடைந்தனா். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டின் பூஜை அறையில் இருந்த வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT