ஈரோடு

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி:அம்மாபேட்டை பெரியசாமி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

பவானி: மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளைக் காட்சிப்படுத்தி அம்மாபேட்டை அரசு நிதியுதவி உயா்நிலைப் பள்ளி மாணவியா் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான ஜவாஹா்லால் நேரு அறிவியல் படைப்பாற்றல் கண்காட்சி ஈரோடு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில் அம்மாபேட்டை அரசு நிதியுதவி உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் அறிவியல் புத்தாக்கத் திறன் படைப்புகளுடன் கலந்து கொண்டனா். இதில், 8 ஆம் வகுப்பு மாணவா் பி.ராம்குமாா், மாணவி எஸ்.இந்துமதி, 10 ஆம் வகுப்பு மாணவியா் எஸ்.கவிதா, சரண்யா ஆகியோா் படைப்புகள் சிறந்தவையாகக் தோ்வு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளிக் குழுத் தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான என்.ஆா்.கோவிந்தராஜா் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT