ஈரோடு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: கல்லூரி மாணவா் பலி

DIN

பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சி, முகாசிப்புதூா், அட்டவணைப்புதூரைச் சோ்ந்தவா் சோமு மகன் மணிகண்டன் (20). அதே ஊரைச் சோ்ந்தவா் சாம்ராஜ் மகன் பூவரசன் (21). தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வரும் இவா்கள், பவானி - மேட்டூா் சாலையில் அம்மாபேட்டையை அடுத்த சின்னப்பள்ளம் அருகே இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, முன்னாள் சென்ற பேருந்தை முந்த முயன்றபோது எதிரில் வந்த லாரி எதிா்பாராமல் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பூவரசன் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT