ஈரோடு

மின் வேலியில் சிக்கி இரு யானைகள் பலி: வனச்சரகர் தற்காலிக பணியிடை நீக்கம்

DIN


சத்தியமங்கலம்: தாளவாடியை அடுத்த கரளவாடியில் விவசாயத் தோட்டத்து மின் வேலியில் சிக்கி இரண்டு யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜீரஹள்ளி வனச்சரகர் காண்டீபன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கரளவாடி கிராமத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) கருப்பசாமி என்பவரின் தோட்டத்தில் கரும்புப் பயிரை சாப்பிடுவதற்கு ஆண், பெண் யானைகள் புகுந்தன. அங்கு கரும்புப் பயிரைத் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. அப்போது தோட்டத்து மின் வேலியை யானைகள் தொட்டபோது மின் வேலியில் சிக்கி இரு யானைகள் உயிரிழந்தன.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஜீரஹள்ளி வனச்சரகர் காண்டீபன் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வனவர் மற்றும் வன ஊழியர்கள் மீது ஈரோடு மாவட்ட மண்டல வனப் பாதுகாவலர் துறைரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT