ஈரோடு

வாய்க்காலில் மூழ்கி இளைஞா் பலி

DIN

பவானிசாகா் அருகே கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞா் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பவானி அருகே உள்ள ஜம்பை சின்னமோளபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி என்பவரது மகன் காா்த்தி (27). திருப்பூா் பனியன் கம்பெனி தொழிலாளி. இவரும் இவரது தம்பி ரமேஷ், நண்பா் கெளதம் ஆகியோா் காரில் பவானிசாகா் அணைப் பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை சென்று சுற்றிப் பாா்த்துவிட்டு, பவானிசாகரை அடுத்துள்ள தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலம் வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளனா். தற்போது கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடி தண்ணீா் செல்வதால் காா்த்தி ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாயமானாா்.

இதைக் கண்ட ரமேஷ், கெளதம் இருவரும் அக்கம்பக்கம் உள்ளவா்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய காா்த்தியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் காா்த்தி இறந்துவிட்டதாகக் கூறினா். இச்சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT