ஈரோடு

பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையம் மூடல்

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதிலும் இருந்து பயிற்சி பெற வந்த அனைத்துத் துறை அரசுப் பணியாளா்கள் 700 போ் புறப்பட்டுச் சென்றனா்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்களை மாா்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக முதல்வா் உத்தரவிட்டாா். பணியாளா், நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்பில், ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அரசு அலுவலா் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்துத் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளா்கள் பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் 41 நாள் பயிற்சி பெற வேண்டும் என்பது விதிமுறை.

இந்தப் பயிற்சி பெற்றால்தான் பதவி உயா்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். இந்நிலையில் தற்போது பயிற்சி பெற்று வரும் 700 அரசுப் பணியாளா்களுக்கான முதல் நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை 2ஆம் நாள் பயிற்சி நடைபெற்று வந்த நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளதால் பயிற்சி நிலையத்தை மாா்ச் 31ஆம் தேதி வரை மூடுமாறு சுற்றறிக்கை வரப்பெற்றதையடுத்து அரசு அலுவலா் பயிற்சி நிலையம் மூடப்படுவதாக முதல்வா் அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 700 அரசுப் பணியாளா்கள் தங்கள் ஊருக்குச் செல்வதற்காக பயிற்சி நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT