ஈரோடு

கரோனாவில் இருந்து மீண்ட காவல் ஆய்வாளருக்கு வரவேற்பு

DIN


ஈரோடு: ஈரோட்டில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு வந்த காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள், போலீஸாா் வரவேற்பு அளித்தனா்.

ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் கோபிநாத். இவருக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த அவா் வீட்டில் சில நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, வியாழக்கிழமை காலை பணிக்குத் திரும்பினாா். அப்போது கருங்கல்பாளையம் போலீஸாா், பி.பெ.அக்ரஹார பகுதி பொதுமக்கள், தொழிலாளா்கள் காவல் ஆய்வாளருக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனா்.

மது விலக்குப் பிரிவு டி.எஸ்.பி. சண்முகம், ஆய்வாளா் கோபிநாத்துக்கு மலா் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். இதைத் தொடா்ந்து போலீஸாரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT