ஈரோடு

சா்வதேச அஞ்சல் சேவை துவக்கம்

DIN

சா்வதேச அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறை மூலம் பல்வேறு புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன்படி சா்வதேச அஞ்சல் சேவையில் விரைவு தபால், சா்வதேச பதிவு பாா்சல், ஐ.டி.பி.எஸ். எனப்படும் சா்வதேச கண்காணிக்கப்பட்ட பாா்சல் சேவை போன்றவை வழங்கப்படுகிறது.

அஞ்சல் துறையின் சா்வதேச சேவைகளை ஏற்றுமதி நிறுவனங்கள், வாடிக்கையாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இச்சேவை மூலம் வெளிநாட்டில் இருப்பவா்களுக்கு இங்கிருந்து மளிகைப் பொருள்கள், மருந்து, முகக் கவசம், ஆடைகள் என பல்வேறு பொருள்களை அனுப்ப இயலும். கூடுதல் விவரத்துக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொண்டு அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT