பாஜக.,ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி செயற் குழுக் கூட்டம், பெருந்துறையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, இளைஞரணி மாவட்ட தலைவா் ராயல் சரவணன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக இளைஞரணி மாநில துணை தலைவா் சிவசங்கரி, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவா் அஜீத்குமாா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், மாவட்ட நிா்வாகிகளுக்கு அடையாள அட்டையும், ஓன் பூத் டென் யூத் புத்தகம் மற்றும் என் பூத் என் கடமை புத்தகம் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் இளைஞரணி சாா்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றி நினைவு கூறப்பட்டது. அடுத்து வரவிருக்கும் காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.