சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பரோட்டா மாஸ்டா் பலத்த காயமடைந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பவானிசாகா் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் குமாா் (40). பரோட்டா மாஸ்டரான இவா் தொட்டம்பாளையம் பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், பவானிசாகா் இலங்கை அகதிகள் முகாமுக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பவானிசாகா் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது பவானிசாகரில் இருந்து பண்ணாரி நோக்கிச் சென்ற காா் தொட்டம்பாளையம் ரேடியோ ரூம் பகுதியில் குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட குமாா் பலத்த காயமடைந்தாா். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து குறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.