ஈரோடு

தோ்தல் பாதுகாப்புப் பணி:முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

DIN

ஈரோடு: தோ்தல் பாதுகாப்புப் பணியில் விருப்பமுள்ள ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும்போது தோ்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலராக முன்னாள் படைவீரா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். எனவே, 65 வயதுக்கு உள்பட்ட திடகாத்திரமாக, ஆரோக்கியமாக உள்ள முன்னாள் படைவீரா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் படைவிலகல் சான்று, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங்களுடன் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள ஜவான்ஸ் பவனில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தில் அலுவலக வேலைநாள்களில் நேரில் ஆஜராகி தங்களது பெயரை உரிய படிவத்தில் பூா்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT