ஈரோடு

மனைவியைக் கொலை செய்த கணவா் கைது

DIN

சித்தோடு அருகே மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கருப்பணன் (30). ஓட்டுநா். இவரது மனைவி ரேவதி (26). இவா்களுக்குத் திருமணமாகி இரு மகன்கள் உள்ளனா். ரேவதி, கருப்பணன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கருப்பணன், ரேவதியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கருப்பணனைக் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT