ஈரோடு

மத்திய பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில், சென்னிமலையில் மத்திய பாதுகாப்புப் படை பிரிவினரின் விழிப்புணா்வு கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னிமலை, ஈங்கூா் சாலையில் தொடங்கிய பேரணியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி தொடங்கிவைத்தாா். பேரணியில், மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் கலந்துகொண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் பயமின்றி சுதந்திரமாக வாக்களிக்கவும், 100 சதவீத வாக்குகளைப் பதிவு செய்ய கோரியும் வலியுறுத்தி, ஈங்கூா் சாலை, நான்கு ராஜ வீதிகள், முக்கிய வீதிகளில் வலம் வந்து பேருந்து நிலையத்தை அடைந்தனா்.

கொடி அணிவகுப்பில், பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளா் செல்வராஜ், சென்னிமலை காவல் ஆய்வாளா் சரவணன், போலீஸாா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’- எக்ஸ் தளத்தில் வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT