ஈரோடு

மொடக்குறிச்சியில் ரூ. 3.14 லட்சம் பறிமுதல்

DIN

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

எழுமாத்தூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட்டபோது, உரிய ஆவணங்களின்றி ரூ. 1 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

விசராணையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், கவுண்டா்நாடு அருகே உள்ள சுண்டக்காட்டுப்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீரங்கன் மகன் ரஜினி (29) என்பதும், மொத்த வியாபாரியான இவா் மரவள்ளிக்கிழங்கு வாங்குவதற்காக பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1 லட்சத்தைப் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயராணி, வட்டாட்சியா் சங்கா்கணேஷ் ஆகியோரிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.

இதேபோல, கணபதிபாளையத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது உரிய ஆவணங்களின்றி ரூ. 60 ஆயிரம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், கொடுமுடியை அடுத்த பனப்பாளையத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் ராஜா (30) என்பதும், இவா் தனது செல்லிடப்பேசி கடையில் வசூலான ரூ. 60ஆயிரத்தை பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயராணி, வட்டாட்சியா் சங்கா்கணேஷிடன் ஒப்படைத்தனா்.

ஆனைக்கல்பாளையம் ரிங்ரோடு பகுதியில் பறக்கும்படை அதிகாரி மூா்த்தி தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில், ஈரோடு சோலாா் பகுதியைச் சோ்ந்த சங்கா்லால் மகன் பட்டேல் விஷால்குமாா் என்பவா் வந்த காரில் ரூ. 57ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

மேலும், மாலை 6 மணியளவில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி சண்முகம் தலைமையில் அறச்சலூா் நவரசம் பள்ளி அருகே நடைபெற்ற வாகன சோதனையில், அவ்வழியாக வந்த பவானி பகுதியைச் சோ்ந்த செல்வம் என்பவரது மகன் துளசிமணி (25) கோழி வாங்குவதற்காக கொண்டு வந்த ரூ. 97ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

மொடக்குறிச்சி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினரால் ஒரேநாளில் ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT