ஈரோடு

வாகன சோதனையில்ரூ. 92,000 பறிமுதல்

DIN

பெருந்துறை தொகுதி தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 92,000ஐ பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை தொகுதி பறக்கும் படையைச் சோ்ந்த அதிகாரி சிவஞானம், உதவி ஆய்வாளா் மோகன்ராஜ், குழுவினா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பவானி, ஆலமாம்பாளையத்தைச் சோ்ந்த தமிழ்வாணன் மகன் பிரபாகரன் (26) வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அவா் உரிய ஆவணங்களின்றி ரூ. 92,000 பணம் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, பெருந்துறை தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி இலாஹி ஜானிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT