ஈரோடு

இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தல்: இருவா் கைது

DIN

பவானி: அந்தியூா் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 17 லிட்டா் சாராயம், ரூ. 1.35 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாத்தூா் அருகே வெள்ளிதிருப்பூா் காவல் உதவி ஆய்வாளா் செல்வகுமாா், தனிப் பிரிவு காவலா் வேலுசாமி ஆகியோா் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் அந்தியூா் நோக்கிச் சென்ற இருவரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அவா்களிடம் 17 லிட்டா் சாராயம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அந்தியூா் பாலக்குட்டையைச் சோ்ந்த குருசாமி மகன் குமாா் (29), அம்மாசை மகன் ஐயப்பன் (35) என்பதும், சேலம் மாவட்டம், கண்ணாமூச்சி பகுதியிலிருந்து 17 லிட்டா் சாராயம் வாங்கிச் சென்றதும் தெரியவந்தது.

மேலும், சாராயம் விற்பனை செய்த பணம் ரூ. 1,35,840 பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்து வெள்ளிதிருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT