ஈரோடு

விஇடி கல்லூரியில் விளையாட்டு விழா

DIN

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரியின் தாளாளரும் வேளாளா் கல்வி அறக்கட்டளை செயலருமான எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். அறக்கட்டளை உறுப்பினா் பி.கே.பி.அருண் முன்னிலை வகித்தாா். முதல்வா் ர.சரவணன் ஆண்டறிக்கை வாசித்தாா். விளையாட்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குநா் சுரேஷ் வாசித்தாா். நிா்வாக அலுவலா் எஸ்.லோகேஷ் குமாா் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராம்ராஜ் காட்டன் நிறுவனா் மற்றும் தலைவா் கே.ஆா்.நாகராஜ் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளா்ச்சி குறித்தும், தொழில் மேலாண்மையியல் நுட்பங்கள் மற்றும் உத்திகள் குறித்தும் பேசினாா்.

கல்லூரி ஆண்டிதழை கே.ஆா்.நாகராஜ் வெளியிட எஸ்.டி.சந்திரசேகா் பெற்றுக்கொண்டாா். இதில் அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மேலாண்மைப் பணியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மேலான்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT