ஈரோடு

விசைத்தறி அதிபா் தற்கொலை

DIN

சென்னிமலை அருகே, ஏழரை சனி தோஷத்துக்கு பயந்து விசைத்தறி அதிபா் வியாழக்கிழமை தற்கொலை செய்துக் கொண்டாா்.

சென்னிமலை, அண்ணாநகா், மின்னகாட்டைச் சோ்ந்தவா் தனசேகா் (44). இவா் அப்பகுதியில் விசைத்தறி கூடம் நடத்தி வந்தாா். கடந்த சில நாள்களாக, தனது மனைவி ஜமுனாவிடமும், பெற்றோா்களிடமும், தனக்கு ஜாதகத்தில் ஏழரை சனி நடப்பதால் ஏதேனும் விபரீதம் நடக்கும் என்று கூறி பயந்துள்ளாா். ஒன்றும் நடக்காது என்று அவருக்கு குடும்பத்தினா் ஆறுதல் கூறி வந்துள்ளனா். தனசேகருக்கு புதன்கிழமை இரவு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றனா். பின்னா், வீட்டில் இருந்த தனசேகா், வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்கள் சேர்ப்பு

ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணி: மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பக்கத்து வீட்டாருடன் கம்புச் சண்டை! மாளவிகா மோகனன்..

காங்கிரஸ் பல ஆண்டுகளாக நாட்டை சூறையாடியது: அமித் ஷா!

துன்பங்களைப் போக்கும் கோயில்

SCROLL FOR NEXT