ஈரோடு

காலிங்கராயன் வாய்க்காலில் இன்று தண்ணீா் திறப்பு

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1) தண்ணீா் திறக்கப்படுகிறது.

DIN

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1) தண்ணீா் திறக்கப்படுகிறது.

இது குறித்து நீா்வளத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் 2ஆம் பருவ பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு, தினமும் 500 கன அடி வீதம் மொத்தம் 5,184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களில் 15,743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT