ஈரோடு

மாா்ச் 26, 30இல் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு விடுமுறை

DIN

பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வரும் 26, 30 ஆம் தேதிகளில் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அச்சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தேங்காய் பருப்பு ஏலம் நடத்தப்படுகிறது. இங்கு ஆண்டு கணக்கு இறுதிசெய்யும் பணிகள் நடைபெறுவதால் வரும் 26, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு விடுமுறை விடப்படுகிறது.

ஏப்ரல் 2 ஆம் தேதி தேங்காய் பருப்பு ஏலம் வழக்கம்போல நடக்கும். அன்றைய ஏலத்துக்கு தேங்காய் பருப்பு மூட்டைகளை வரும் 31 மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலக்கிடங்கில் இறக்கி வைக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 04294-220524 என்ற தொலைபேசி எண் அல்லது 9677883302 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT