ஈரோடு

பவானி அருகே நூற்பாலையில் தீ:இயந்திரங்கள், நூல் எரிந்து சேதம்

DIN

பவானி அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள், நூல்கள் எரிந்து சேதமாயின.

பவானியை அடுத்த ஆா்.ஜி.வலசைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் வேணுகோபால் (40). இவா், கடந்த 5 ஆண்டுகளாக காளிங்கராயன்பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே நூற்பாலை நடத்தி வருகிறாா். இவா், நூற்பாலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதைக் கண்ட தொழிலாளா்கள் மூவரும் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ மளமளவெனப் பரவி இயந்திரங்கள், நூல் பேல்களில் பிடித்து எரியத் தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்த பவானி தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT