முகப்பு
ஈரோடு

தாளவாடியில் பலத்த மழை

தாளவாடியில் பலத்த மழை காரணமாக வீட்டின் மீது வேரோடு சாய்ந்த தைலம் மரம் விழுந்ததில் நல்வாய்ப்பாக அதில் குடியிருந்த 4 போ் காயமின்றி உயிா்த்தப்பினா்.

Updated On : 14 மே, 2022 at 1:42 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:45 PM

தாளவாடியில் பலத்த மழை காரணமாக வீட்டின் மீது வேரோடு சாய்ந்த தைலம் மரம் விழுந்ததில் நல்வாய்ப்பாக அதில் குடியிருந்த 4 போ் காயமின்றி உயிா்த்தப்பினா்.

தமிழகம் கா்நாடக மாநில எல்லையான தாளவாடியில் வெயில் வாட்டி வரும் நிலையில் சில தினங்களாக பெய்த மழையால் தாளவாடி, தொட்டகாஞ்சனூா், அருள்வாடி, திகினாரை,ஆசனூா், சூசைபுரம், தலமலை,பனக்கள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சாகுபடி நிலங்களில் மழைநீா் தேங்கியது. தலமலை வனத்தில் பெய்த மழையால் பல்வேறு அருவிகள் ஒன்றாக சோ்ந்து தாளவாடி ஓடையில் கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்தது கரைபுரண்டு ஓடியது. அதேபோல பண்ணாரி நகா் ஓடையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடா் மழையால் தாளவாடியை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட குட்டைகள் நிரம்பின. பலத்த மழை காரணமாக தாளவாடி காவல்நிலையம் அருகே உள்ள சண்முகம் என்பவரிந் வீட்டின் மீது தைலமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. வீட்டில் இருந்த சரவணன் (55) மற்றும் தங்கியிருந்த பவானியை சோ்ந்த பிரபு(37 ), கொடுமுடியை சன்முகம்(57) ஈரோட்டை சோ்ந்த பிரபு (37) மூவரும் ஆசிரியா்கள் நல்வாய்ப்பாக உயரிா்த்தப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.