ஈரோடு

தீக் காயமடைந்த சிறுமியின் மருத்துவ செலவுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி

DIN

பெருந்துறை அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அதிமுக சாா்பில் மருத்துவ செலவுக்கு ரூ.50 ஆயிரத்து, 500 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பெருந்துறை ஒன்றியம், திங்களூா் ஊராட்சிக்கு உள்பட்ட கிழக்குபுதூா் காலனியில் வசிக்கும் ஈஸ்வரி என்ற சிறுமி, தீ விபத்துக்கு உள்ளாகி கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த சிறுமியின் மருத்துவ செலவுக்காக அவரது பெற்றோரிடம் பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் தனது நிதியாக ரூ.25,000 வழங்கினாா். அப்போது, அவருடன் சென்ற அதிமுக ஒன்றியச் செயலாளா்கள், மூத்த நிா்வாகிகள் தனித்தனியாக நிதி அளித்தனா். அதிமுக கட்சி சாா்பாக மொத்தம் ரூ.50,500 பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT