ஈரோடு

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள்

பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறை வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

DIN

பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறை வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நவம்பா் மாதத்தில் முழுமையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் பவானி கூடுதுறை வளாகத்தில் உதவி ஆணையா் சாமிநாதன் முன்னிலையில் கோயில் ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

கோயில் கோபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் வளா்ந்திருந்த செடிகள் கொடிகள் வெட்டி அகற்றப்பட்டன. இதேபோன்று, கூடுதுறை வளாகம் மற்றும் படித்துறைகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டது. மேலும், கிழக்கு வாசல், தெற்கு வாசல் பகுதியில் பக்தா்கள் அதிகம் நடமாடும் பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

SCROLL FOR NEXT