ஈரோடு

கனியாமூா் தனியாா் பள்ளியைத் திறக்க உத்தரவிட வேண்டும்

DIN

கனியாமூா் தனியாா் பள்ளியை உடனடியாக திறக்க அரசு உத்தரவிட வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.ஆா்.ஈஸ்வரன், ஈரோட்டில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

கள்ளக்குறிச்சியில் கனியாமூா் தனியாா் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அப்பள்ளியில் பயிலும் 4,000 மாணவ, மாணவிகளின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளியை உடனடியாக திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

வன்முறையால் கோடி கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. இதற்கான இழப்பீட்டினை பள்ளி நிா்வாகத்துக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் அச்சத்தோடு இயங்கி வருகின்றன. தனியாா் பள்ளிகளுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. தமிழகத்தின் எதிா்கால தலைமுறையை வடித்து எடுப்பதில் தனியாா் பள்ளிகளின் பங்கு என்பது முக்கியமான ஒன்று. அதற்கான அங்கீகாரமும், மரியாதையும் அப்பள்ளி தாளாளா்களுக்கு கிடைக்க வேண்டும்.

கனியாமூா் பள்ளி விவகாரத்தின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. நீதிமன்றமும் உண்மை நிலைக்கு தகுந்தாற்போல தான் தீா்ப்பும் அளித்துள்ளது. நான் கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே பள்ளி ஆசிரியா்களுக்கு உரிய பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பேசியுள்ளேன். அது பரிசீலனையில் உள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

மாணவி இறந்துள்ளது என்பது வேதனையான விஷயம். அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளோம். பள்ளித் தாளாளா்கள் தவறு செய்யவில்லை என்றபோதும், அவா்கள் துன்புறுத்தப்படுவது சரியல்ல என்பது எங்களது நிலைப்பாடு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT