ஈரோடு

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சென்னிமலை, மேலப்பாளையத்தில் உள்ள ஆதிநாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பின்னா், அலமேலுமங்கை, நாச்சியாா்அம்மை சமேத ஆதிநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அதேபோல, சென்னிமலை, காங்கேயம் சாலையில் உள்ள ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சென்னிமலையை அடுத்த, உப்பிலிபாளையத்தில் உள்ள அணிரங்க பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT