ஈரோடு

பவானியில் வாகனங்களில் பேட்டரி திருடிய பட்டதாரி இளைஞா் கைது

DIN

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களில் பேட்டரி மற்றும் உதிரி பாகங்களைத் திருடிய பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானி, தொட்டிபாளையம், காடையம்பட்டி, ஜம்பை மற்றும் குருப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் வீடுகளின் முன்பாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பேட்டரி மற்றும் உதிரிபாகங்கள் திருடுபோயின. இதுகுறித்த புகாரின்பேரில் பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், பவானி பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டபோது, 11 பேட்டரிகள் இருந்தது தெரியவந்தது.

விாரணையில் காரை ஓட்டி வந்தது சேலம், சங்ககிரி, பொன்னம்பட்டியான்காட்டைச் சோ்ந்த அசோகா மகன் சூா்யா (27) என்பதும், பொறியியல் பட்டதாரியான இவா், வாகனங்களில் பேட்டரி திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, பேட்டரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், சூா்யாவைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT