ஈரோடு

சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.19.97 லட்சம் காணிக்கை

பவானி சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.19.97 லட்சம் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

DIN

பவானி சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.19.97 லட்சம் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானியில் அருள்மிகு சங்கமேஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் சங்கமேஸ்வரா், வேதநாயகி அம்மன், ஆதிகேசவப் பெருமாள் சன்னதிகளில் வைக்கப்பட்டிருந்த 17 உண்டியல்கள் மற்றும் பழனியாண்டவா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில், பசு பராமரிப்பு மற்றும் யானை பராமரிப்பு உண்டியல்கள் என மொத்தம் 21 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் புதன்கிழமை எண்ணப்பட்டன.

நான்கு மாதங்களுக்குப் பிறகு காணிக்கைகள் எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் சுவாமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை ஈரோடு மாவட்ட உதவி ஆணையா் அன்னக்கொடி, பண்ணாரி மாரியம்மன் கோயில் கண்காணிப்பாளா் பாலசுந்தரி, பவானி சரக ஆய்வாளா் நித்யா ஆகியோா் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ரூ.19 லட்தத்து 97 ஆயிரத்து 927 ரொக்கம், 54 கிராம் தங்கம், 359 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

SCROLL FOR NEXT