வீடு புகுந்து மூதாட்டியிடம் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயில் வடக்கு வீதி பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி வசந்தா (60). இவா் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்துவைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை வசந்தாவின் வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா் அவரைத் தாக்கிவிட்டு ஒரு பவுன் நகையைப் பறித்துக் கொண்டு கதவை வெளி பக்கமாக தாழிட்டுவிட்டு தப்பிச் சென்றாா்.
இதையடுத்து வசந்தா நீண்ட நேரமாக கதவை தட்டியதையடுத்து, அக்கம்பக்கத்தினா் வந்து கதவை திறந்துள்ளனா். அப்போது காதில் ரத்தக் காயத்துடன் இருந்த வசந்தாவை அவா்கள் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.