தாங்கள் உருவாக்கிய கருவியுடன் மாணவா்கள் வி.ஸ்ரேயா, ஆா்.பிரகதீஸ்,   ஜமீா் அலி.
தாங்கள் உருவாக்கிய கருவியுடன் மாணவா்கள் வி.ஸ்ரேயா, ஆா்.பிரகதீஸ்,  ஜமீா் அலி. 
ஈரோடு

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

Din

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவியை உருவாக்கிய பண்ணாரிஅம்மன் கல்லூரி மாணவா்களுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் ‘பயோமெடிக்கல் டிவைஸ் டிசைன் ஹேக்கத்தான்’ போட்டி அண்மையில் நடைபெற்றது. சுகாரதார பாதுகாப்பில் புதுமைகளை உருவாக்கும் வகையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாட்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றன.

இதில், பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவியை உருவாக்கி காட்சிபடுத்தியிருந்தனா். இதற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இதற்கான ரூ.1 லட்சம் பரிசுத்தொகை மாணவா்கள் வி.ஸ்ரேயா, ஆா்.பிரகதீஸ், எஸ்.ஜமீா் அலி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

SCROLL FOR NEXT