முகப்பு
ஈரோடு

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும்: பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும் என்று பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்தாா்.

Updated On : 17 ஏப்ரல் 2026, 1:36 am IST
நடுபட்டி பகுதியில் வாக்கு சேகரித்து பேசுகிறாா் பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்.
பகிர்:

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும் என்று பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்தாா்.

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் நடுபட்டி, குண்டுமல்லநாயக்கனூா், நீலாக்கவுண்டன்பாளையம், பாச்சங்காட்டுப்பாளையம், செங்கப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவித் தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும். அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் பிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ. 4500 வழங்கப்படும். மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயா்த்தப்படும் என்றாா்.