பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.38.45 லட்சத்துக்கு விளைபொருள்கள் திங்கள்கிழமை விற்பனையாயின.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 3,350 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ ரூ.47.59 முதல் ரூ.56.29 வரை ரூ.76,714-க்கு விற்பனையானது.
68 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கிலோ ரூ.170.89 முதல் ரூ.212.97 வரை ரூ.3,69,988-க்கும், 3 மூட்டை உளுந்து ரூ.83.16 முதல் ரூ.83.69 வரை ரூ.22,904-க்கும், 6 மூட்டை எள் ரூ.123.45 வீதம் ரூ.54,441-க்கும் ஏலம்போனது.
600 மூட்டை துவரை கிலோ ரூ.84.25 முதல் ரூ.94.75 வரை ரூ.33,12,000-க்கும், ஒரு மூட்டை ஆமணக்கு ரூ.64.19 வீதம் ரூ.2,150-க்கும், ஒரு மூட்டை அவரை ரூ.52.69 முதல் ரூ.54.19 வரை ரூ.1,897-க்கும், ஒரு மூட்டை பச்சைப்பயறு ரூ.52.69 முதல் ரூ.54.19 வரை ரூ.2,546-க்கும்,
2 மூட்டை கொள்ளு ரூ.52.69 முதல் ரூ.54.19 வரை ரூ.3,002-க்கும் விற்பனையானது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.38,45,651 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.